உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

இமயத் தொடுங் கிடந்த சேது வரம்பாகச் செங்கோல் செலுத்தி .. ..

வேத நீதியை விளக்கி மீதுயர்

வீரத் தனிக்கொடி தியாகக் கொடியொடும்

ஏற்பவர் வரு கென்று நிற்பக் கோத்தொழில்

உரிமையி னெய்தி அரைசு வீற்றிருந்து

மேவரு மனுநெறி விளக்கிய கோவிராசகேசரி வர்மரான உடையார் ஸ்ரீவீர ராசேந்திர தேவர்க்கு யாண்டு.'

П

251

வீரமே துணையாகவும் தியாகமே யணியாகவும் செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து கூடல் சங்கமத்து ஆகவமல்லனை அஞ்சுவித்து விக்கலனையும் சிங்கணனையும் உடை புறங்கண்டு மற்றவன் மாதேவியரோடும் வஸ்து வாகனங் கைக்கொண்டு இரண்டாம் விசையிலும் குறித்த களத்தாகவமல்லனை அஞ்சு வித்து வேங்கை நாடு மீட்டுக்கொண்டு தன்னுடன் பிறந்த முன்னவர் விரத முடித்து மூன்றாம் விசையிலும் சோமேசுவரன் கட்டிய கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம் கம்பிலி சுட்டுக் கரடிக் கல்லில் செயத் தம்பம் நாட்டித் தேவநாதன் முதல் சாமந்தரைச் சக்கரக் கோட்டத்துத் துரத்தியவர்கள் உரிய தாரம் பிடித்துக்கொண்டு கன்னக் குச்சி மீட்டு எல்லைகெடாது நிலையிட்டு விசய சிம்மாசனத்து உலக முழுதுடை யாளோடும் வீற்றிருந்தருளிய கோராசகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ வீரராசேந்திரன் சோழ தேவர்க்கு யாண்டு.

1. வீரராசேந்திர சோழனுடைய இம்மெய்க்கீர்த்தியின் கடைப் பகுதி சில இடங்களில் சிதைந்துபோய்விட்டது. செங்கற்பட்டு ஜில்லா திருமுக்கூடலிலுள்ள ஒரே கல்வெட்டில்தான் இந்தப்பெரிய மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. (EP.Ind, Vo.1 XXI, No.38) இதுவேறு கல்வெட்டுக்களில் காணப்படாமையின் ஒப்புநோக்கிப் பதிப்பிக்க முடியவில்லை.