உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

இதன் கருத்து:

239

“எல்லா உலகத்திற்கும் ஒப்பற்றவீரனும், வாட்போரில் வன்மை மிக்கவனும். வீர ராக்ஷஸன் எனப் போற்றப்படுபவனும், கங்காராமன் என்னும் பெயருடையானும், மநுகுலத்தை உயர்த்தியவனும், அஞ்சத்தக்க போர்க்களத்தில் பகைவர்க்குச் சூறாவளியும். சோழர் குடிக்கு நேரும் தாழ்வினைத் தவிர்க்கும் தனி, வீரனும், மூன்று ஆண்டுகள்.... தரித்த முடிகளை யுடையவனும், அரசர்க்கரசும், வானுலக மகளிர் கூட்டுறவால் செருக்கிய பாண்டியன் சேரன் என்னு மிவர்கள் வெண்சாமரை வீசிப்போற்றப்பெற்ற பெருமையுடையானும், பாண்டிய மண்டலத்தைக் கவர்ந்த கன்னட வேந்தனை வென்றவனும், போரில் சேனைகளை யிழந்த வீரசோமேசுவரன் என்பவனால் சரணடைந்து பற்றிக்கொள்ளப்பட்ட பாதங்களையுடைய வனும், வீரர்க்கு அணிகலனாக விளங்குபவனும், ராஜ பரமேசுவரன். ராஜபரமமாகேசுவரன், ராஜ நாராயணன் என்னும் பெயர்களை யுடையவனும், எல்லாச் சமயங்களையும் ஒப்ப நிலைபெறச் செய்பவனும் யானை காலாள் முதலிய படைகளைப் புரப்பவனும், அரசியல், இசை, ஏனைக்கல்வி ஆகியவற்றில் தேர்ச்சிமிக்க தலைவனும், பகைவேந்தர் உளத்திற்குச் சல்யமென்னும் படையை ஒத்துக் கலக்கஞ் செய்பவனுமாகிய திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு"