உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

முதற் பதிப்பின் முகவுரை

சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் இலக்கியம் வரலாறு ஒன்று சிறந்த முறையில் எழுதவேண்டுமென்று தமிழாராய்ச்சித் துறைத் தலைவர்க்குத் தெரிவித்தார்கள். அந்நாட்களில் அப்பகுதிக்குத் தலைவரா யிருந்த டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார் M. A., Ph. D. அவர்கள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர் ஐவர்க்கும் அதனை அறிவித்து எழுதத் தொடங்கு மாறு கூறிச் சில வரையறைகளும் செய்தார்கள். தொல்காப்பியர் கால முதல் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியவுள்ள இலக்கிய வரலாற்றை முதலில் எழுதவேண்டும் என்பதும், அதனைச் சில பகுதிகளாகப் பிரித்து ஆராய்ச்சித்துறை ஆசிரியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை எழுத வேண்டும் என்பதும், அவற்றுள் இன்னார், இன்னார் இன்ன இன்ன பகுதியை எழுதவேண்டும் என்பதும், அப்போது செய்யப்பட்ட வரையறைகளாகும். அதில் எனக்குக் கொடுத்த பகுதி, கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்திற்குப் பிறகு கி. பி. 600 வரையிலுள்ள ருண்ட கால இலக்கிய வரலாறேயாகும்.

இவ்விருண்டகாலப் பகுதியில் தோன்றிய இலக்கியங் உணர்ந்து கோடற்குத் தக்க ஆதாரங்களின்மை அறிஞர் பலரும் அறிந்ததே. எனினும், கடைச் சங்க காலத்திற்குப் பின்னர், தமிழ் நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் வடமொழியில் எழுதப்பெற்ற சில சைன நூல்களும்,பாலி மொழியில் இயற்றப்பெற்ற சில பௌத்த நூல்களும், பிராகிருதத்திலும் வடமொழியிலும் வரையப்பெற்ற சில செப்பேடுகளும் இக்கால நிலையை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டன. அன்றியும், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களிலும், பேராசிரியர்