உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204




ஊ. பண்பாட்டாய்வு

36. துடிக்குறி

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைச் சோதிட சாத்திரத்தின் வலிமையினால் முன்னரே அறிந்து கொள்ளலாம்; இஃது நம்முன்னோர்கள் கொண்ட முறை யென்பது யாவரும் அறிந்த விஷயம். அன்றியும் கண், தோள், மார்பு முதலிய உறுப்புகள் துடித்தலினாலும் பின்னர்ச் சம்பவிக்கும் சுகதுக்கங்களைத் தூலமாக அறிந்துகொள்ளலாம். இஃதும் நம்முன்னோர்கள் கொண்ட முறைகளில் ஒன்றென்பது யான் அடியில்வரையும் ஆராய்ச்சியால் நன்கு விளங்கும்.

இராவணனாற் சிறையிடப் பெற்று அசோகவனத்திருந்த சீதாபிராட்டி, ஆண்டு அருகேயிருந்த தாயினுமினியவளாம் திரிசடையை நோக்கி, "தூயை நீ கேட்டியென் துணைவியா மெனா மேயதோர் கட்டுரை" பகர்ந்தனள். அக்கட்டுரையை ஈண்டு வரைகின்றேன்.

சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 32.

நலந்துடிக்கின்ற தோநான் செய்தீவினைச் சலந்துடித்தின்னமுந்தருவ துண்மையோ
பொலந்துடிமருங்குலாய் புருவங்கண்முதல்
வலந்துடிக்கின்றிலவருவ தோர்கிலேன்.

இதன் கருத்து : எனது கண் புருவம் முதலியன இடது பக்கத்திற் றுடிக்கின்றன; இதனால் நன்மையுண்டாமோ அல்லது தீமையுண்டாமோ யான் அறிகின்றிலேனென்பதாம்.

சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 33.

முனியொடுதிலையின் முதல்வன்முந்துநாள் துனியறுபுருவமுந்தோளுநாட்டமும்