பக்கம்:துணிந்தவன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 7. அவன் அவளுக்குச் சமீபமாக வந்ததும், 'நீங்கள் வெளியே போகும் போது நான் பார்த்தேன். எப்படியும் இந்த வழியாகத்தானே திரும்பி வருவீர்கள் என்று காத்திருந்தேன். எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறேன் தெரியுமா? இன்னிக்கு உங்களுக்கு ஏன் இவ்வளவு நேரம்?' என்றாள் அவள். காந்திமதி அவள் பெயர், விசேஷ நாட்களில் பளபளவென்று துலக்கப்பெற்று, பொட்டிட்டு, ஒளி ஏற்றி வைக்கப்படுகிற குத்துவிளக்குப் போல் கண் நிறைந்த தோற்றமுடைய பெண். உள்ளத்தின் அன்பும் அழகும், லட்சுமீகரம் என்பார்களே அத்தகைய பொலிவு பூத்த முகத்தில் மல்ர்ந்து விளங்கும். மாதவனின் மாமா மகள் அவள். 'இன்றைக்கு விசேஷமான நாள்தான் என்று மெதுவாக ஆனால், அழுத்தம் தொனிக்கும்படி - உச்சரித் தான் அவன். 'என்ன விசேஷம் ?: "என் விசேஷம் இருக்கட்டும். நீ சொல்ல விரும்பும் விஷயத்தை முதலில் சொல்லு." - 'எனக்குக் கல்யாணத்துக்கு நாள் குறித்துவிட் டார்கள். உங்களுக்குத் தெரிந்திருக்குமே?' என்று கூறி அவள் அவன் முகத்தை நோக்கினாள். மரத்தின் கீழே கரிய நிழல் படிந்திருந்த போதிலும், எங்கும் பட்டப் பகல் போல் பளிச்செனப் பரவிக் கிடந்த ஒளி வெள்ளம் அவ்விடத்தின் இருட்டையும் வெளிறடித்திருந்த அனைத்தையும் தனித்தனியே பார்வைப் புலனுக்கு எடுத்துக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/19&oldid=923490" இலிருந்து மீள்விக்கப்பட்டது