பக்கம்:துணிந்தவன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்தவன் 5 இன்பக் கதைகளும், பயங்கர அனுபவங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். மெதுவாக நடந்து சென்ற மாதவன் பெருமூச் செறிந்தான். அவன் வாழ்வின் வெறுமையும், அதனால் எழுந்த ஏக்கமும் அதில் பிரதிபலித்தன. தன் நினைவுகளே தன்னைச் சுமையாக அழுத்த, தலை குனிந்தபடி நடந்த அவனை அத்தான்!” என்ற ரகசிய அழைப்பு நிமிர்ந்து பார்க்கச் செய்தது. ஒரு வீட்டில், கதவைச் சிறிதே திறந்து வைத்துக் கொண்டு மறைந்தும் மறையாமலும் காட்சி தந்த பெண் நிலவு அவன் முகத்தில் மலர்ச்சி ஏற்படக் காரண மாயிற்று. அவன் ஏன் என்ற கேள்வியைப் பார்வையில் நிறுத்தினான். "தோட்டத்துப் பக்கம் வாங்க. உங்களிடம் முக்கிய விஷயம் பேசனும் என்று அவள் மிக மெதுவான குரலில் சொன்னாள். அவன் தலை அசைவைப் பெற்றதும், கதவை அடைத்துத் தாழிட்டு விட்டுப் போனாள். மாதவன் ஒரு கணம் தயங்கி நின்றான். அங்கும் இங்கும் பார்வை எறிந்தான். சூழ்நிலையில் மாறுதல் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. அவன் நிதானமாக வீட்டின் பின்பக்கம் வந்து சேர்ந்தபோது, அவள் அங்கே நிழல் அடர்ந்த மரத்தடியில் அவனுக்காகக் காத்து நின்றாள். - 'என்ன காந்தி, என்ன விஷயம்? அவன் குரல் அவனுடைய எச்சரிக்கையான சுபாவத்தை வெளிப் படுத்தியது. இருப்பினும் அந்த யுவதி மெதுவாகப் பேசு!" என எச்சரிக்க விரும்பியவளாய், 'உஷ்!" என்ற ஒலி செய்து ஒரு விரலைத் தன் உதடுகள் மேல் பதித்துக் காட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/18&oldid=923489" இலிருந்து மீள்விக்கப்பட்டது