100
தும்பைப் பூ
கிஞ்சித்தும் கிடையாது" என்று கூறியவாறு மூட்டையுடன் நடக்கலானாள் மங்கை.
மற்றவர்களுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவள் வெளியே போசையில், "எங்கே போகிறாய், சித்தி!" என்று கேட்டுக் கொண்டே கணேசன் ஓடிவந்து கையைப் பிடித்தான். குழந்தை அவனுக்கு அங்கு நிகழ்ந்த பிரளயம்;தெரியவே தெரியாது. சிவகுமாரன் மட்டும் சத்தத்தைக் கேட்டு வந்து வருத்தத்துடன் வழியில் நின்றிருந்தான்.
"இரு கண்ணு ; வருகிறேன்" என்று கூறி மங்கை அவனைக் கட்டி உச்சி மோந்து விட்டுப் போகலானாள். ஒன்றும் தோன்றாமல் அவன் திகைத்து நின்று விட்டான்.
மங்கை வாயிற்படியை விட்டு இறங்கிய பின்தான் பிள்ளையவர்கள் திடுக்கிட்டார். அவர் விசுவத்தை அருகழைத்து ஏதோ சொன்னார். பணப்பையிலிருந்து. நாலைந்து நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தார்.
"இரு, சித்தி வருகிறேன்" என்று விசுவநாதன் ஓடினான்.
"நானே போய்விடுவேன், நீ இரு, விசுவம்!"
திலகவதி கணவனை ஒருவிதமாகப் பார்த்து விட்டுக் கழுத்தைச் சொடுக்கிக் கொண்டு உள்ளே விரைப்பாகப் போனாள்.
தந்தையும், மகளும், மசனும் இருளில் போய்க் கொண்டிருக்கும் மங்கையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மங்கை போவதையும், மற்றவர்கள் வருத்தத்தையும் கவனித்த கணேசன், திடீரென ஏதோ புரிந்து கொண்டவன் போல, "சித்தி!" எனக் கதறியவாறு ஓட முயன்றான். சிவகுமாரன் அவனைப் பிடித்துத் தூக்கிக் கொண்டான்.