60
தும்பைப் பூ
இருந்த அவளுடைய கூச்சத்தைப் போக்கடித்து விட்டு அவளை அத்தான் முன்னே வரச் செய்தது.
இப்போதுதான் மங்கை திலகவதி கொடுத்த குரலுக்கு, “இதோ போகிறேன், அக்கா! அத்தான்வந்திருக்கிறார்” என்று பதிலுக்குக் குரல் கொடுக்கலானாள். பின் அவள் சதானந்தம் பிள்ளையைப் பார்த்து, “அக்கா வீட்டு விலக்கமாயிருக்காங்க” என்று கூறியவள், “முதலில் காபி கொண்டு வரட்டுமா? அத்தான்! இல்லாவிட்டால், குளித்துவிட்டுப் பின்னால் பலகாரத்துடன் குடிக்கிறீர்களா?” என்று திடீரென நினைத்துக் கொண்டவளாய்க் கேட்டாள்.
சதானந்தம் பிள்ளை மங்கையர்க்கரசியின் தடுமாற்றத்தைக் கண்டு புன்னகை புரிந்தவாறு, “அதுதான் தெரிகிறதே பட்டத்தரசி அந்தப்புரத்திலிருந்து கொண்டு அதிகாரஞ் செய்யும்போதே! மூன்று நாளைக்கு இந்த முடிசூடா இளவரசியின் ஆட்சிக்கு அடங்கி நாங்கள் இருக்க வேண்டும். இல்லையா?” என்று தமாஷாகக் கேட்டவர் பின், “நான் முதலில் குளித்துவிட்டு வந்து அப்புறம் சிற்றுண்டியும் காபியும் அருந்துகிறேன்” என்று கூறினார்.
“அப்ப நான் போய் ஸ்நான அறையில் வெந்நீரைக் கொண்டு வைக்கிறேன், வாருங்கள்” என்று கூறிக்கொண்டே மங்கை உள்ளே போக முயன்றாள்.
அவளுடைய பயிர்ப்பையும் படபடப்பையும் கண்டு சதானந்தம் பிள்ளை தமக்குள் வியந்து பாராட்டிக்கொண்டே குளிக்கும் அறைக்குப் போனார். தாம் வருவதற்குள் எல்லாம் தயாராயிருப்பதைப் பார்த்து அவர் பிரமித்தார். அவர் குளித்துவிட்டு ஈர உடையை மாற்றுவதற்குள் வேறு ஆடைகள் வந்து காத்திருந்தன. வழக்கத்தைவிட இன்று சுறுசுறுப்பாகக் காரியங்க நடைபெறுவது அவருடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன.
சதானந்தம் பிள்ளே உடைகளைத் தரித்துக்கொண்டு, கிராப்பைச் சிவிவிட்டுக்கொண்டு கூடத்துக்கு வந்தார்.