பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தும்பைப் பூ


மங்கை மெளனமாகப் போனாலும் அவள் மனம் குழம்பிப் போயிருந்தது. பின்னால் தொங்கும் முந்தானையைப் பிடித்து விஷமம் செய்துகொண்டு வரும் கணேசனக்கூட அவள் கவனியாமல் போகலானாள்.

“என்ன சித்தி!ஒரு மாதிரியாயிருக்கிறே?...” என்று விசுவ நாதம் கேட்டுக் கொண்டே எதிரே வந்தான்.

இக்கேள்வி அவளைத் திடுக்கிட வைத்ததாயினும் அடுத்த கணம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “ஓ! நீயும் வந்து விட்டாயா? வாருங்கள், எல்லோரும் பலகாரம் சாப்பிடலாம்” என்று கூப்பிட்டுக் கொண்டு போனாள்.

“கடைசி பீரியட் டிரில் கிளாஸ். உடம்பு என்னவோ போலிருந்ததால் கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன், சித்தி...!” என்று வழக்கத்தைவிடச் சீக்கிரமாக வந்துவிட்டதற்கு சமாதானம் சொன்னான் விசுவநாதன்.

“உடம்புக்கென்ன, விசுவம்?” என்று பரிவோடு கேட்ட மங்கை அவன் கையைப் பிடித்துப் பார்த்தாள். நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். மார்பில் கை வைத்துக் கவனித்தாள்.

“சுரம் கிரம் ஒன்னுமில்லை, சித்தி! என்னவோ சோர்வாயிருந்தது! அதுதான்...”

“அப்படியானல், நீ காபி சாப்பிடாதே! ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுக்கிறேன்”... என்று கூறிக்கொண்டே விரைந்து போனாள்.

“சித்தியண்டை ஒன்னும் சொல்லிடக்கூடாது. ஒரேயடியா பயந்து போயிடும்!...அம்மாவுக்கு இருக்கிற நெஞ்சுத் தைரியம் சித்திக்குக் கிடையாது...” என்று போகும் மங்கையையே கவனித்துக் கொண்டிருந்த கோகிலாவைப் பார்த்துச் சொன்னாள் விஸ்வநாதன்.

“சித்தி சொல்வதற்கு எதிரா ஒன்னும் சொல்லாதே அண்ணா! அவங்க என்ன கொடுக்கிறாங்களோ அதைத் தடை