பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தும்பைப் பூ

கொண்டிருக்கிறோம்” என்று கூறிவிட்டுப் போகலானார். மனதை ஒருவிதமாகத் திடப்படுத்திக்கொண்டிருக்கும் ‘சமயத்தில் சில நிமிடங்களில் மீண்டும் மங்கையைப் பார்க்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டதே’ என்று உள்ளத் துள்ளலை உணர்ந்து அவர் எண்ணினார். மங்கையைப் பார்த்துமே தம் மனவுறுதியும் கம்பீரமும் அதிகாரத்தோரணையும் பறி போய் விடுகிறதே என்று கருதி அவர் கருத்து அழிந்தார்.

சதானந்தம்பிள்ளை போய் உட்கார்ந்து, வந்திருந்த வெளியூர் நண்பர்களுடன் பேசத்தொடங்கிய சில கணங்களுக்கெல்லாம் மங்கை சிற்றுண்டிகளைக் கொண்டு வந்தாள். அத்தான் சொன்னாரே என்று அவசர அவசரமாக எடுத்து வந்தவள். வந்திருப்பவர்கள் முற்றும் புதிதாய் இருப்பதை யறிந்து தயங்கி நின்றாள். வேற்றார் முன் எப்படிப்போவது என்று அவள் வெட்கப்பட்டாள். சில விநாடிகள் மனதுடன் போராடிக் கடைசியாக, “அத்தான், அத்தான்!” என மெல்லக் கூப்பிட்டாள்.

மிக மெல்லிய குரலில் கூப்பிட்டாலும் மங்கையின் இனிமையான குரல் சதானந்தம் பிள்ளையின் கவனத்தை எப்படியோ ஈர்த்து விட்டது. உடனே அவர் எழுந்து வந்து மங்கை வைத்திருப்பதை வாங்கினார். வாங்கிய பதட்டத்தில் அவர் கைவிரல்கள் மங்கையின் கரங்களில் பட்டுவிட்டன. இப்படித் தொட்டதால் ஏற்பட்ட இன்ப உணர்ச்சி சதானந்தம் பிள்ளையைத் தடுமாற வைத்தது. மங்கைக்கும் இது மீண்டும் கிளுகிளுப்பை யுண்டாக்கிவிட்டது. ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு உடனே உள்ளே போகலனாள்.

சதானந்தம் பிள்ளை தடுமாற்றத்துடனேயே பலகாரத் தட்டுகளே எடுத்துப்போய் நண்பர்கள் முன் வைத்துச் சாப்பிடுமாறு உபசரித்தார்.

“வரும்போதுதான், காபி சாப்பிட்டு விட்டு வந்தோம். உட்லண்ட்ஸில் தான் தங்கியிருக்கிறோம்” என்றார் நண்பர்களில் ஒருவர்.