பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

—20–

அலரடி வணங்கிச் செல்லவேண்டுமென்று ஆலயஞ் சென்று வழிபாடு ஆற்றி வருவதற்குமுன் தம் வருகை யினே முன்கூட்டிப் பர்வையார்க்கு அறிவிக்குமாறு தம் பரிசனங்களுக்குச் சொல்லி விட்டனர். அவர்கள் பரவையார் மாளிகையை அணுகிச் செய்தியினைச் சொல்ல முனைந்தபோது, சுந்தரர்மீது கொண்ட சீற்றம் காரணமாக, அவர்களே உள்ளே விடவும், வெளியில் உள்ளார் மறுத்து விட்டனர். இதற்குக் காரணம் இன் னது என்பதை அறிந்த பரிசனங்கள் சுந்தரரிடம் ' பெரும நீர் தொண்டைநாட்டில் திருஒற்றியூரில் சங்கிலியார் என்பவரை மணந்ததைப் பரவையார் உணர்ந்து உம் மாட்டுச் சினம் மிகுதியும் கொண்டிருக் கிருர். அதனல் காங்கள் உள்ளே செல்ல இயலவில்லை." என்றனர். கம்பி யாரூரர் இதைக் கேட்டுத் துணுக் குற்று அறிஞர் ஒருவரை அம்மையார் மாளிகைக்குச் சென்து சீற்றம் தணிக்குமாறு செப்பிவிட்டனர். அவர் களும் அப்படியே சென்று பரவையாரைக் கண்டு சமா தான மொழிகள் பல சாற்றியும் அவ் வம்மையார், 'பெரியீர் நம்பியாரூரரைப் பற்றி ஒன்றும் என்னிடம் க. முதிர். அவர் குற்றம் உடையவர். அவர் சார்பில் மேலும் பேசினல் என் உயிர் என் உடலில் கில்லாது.' என்று உறுதியாகக் கூறிவிட்டனர். அதற்குமேல் ஒன்றும் பேச வழி அற்றவராய்த் திரும்பித் தேவாசிரிய மண் பத்தில் அமர்ந்து பலவாறு எண்ணிக் கொண் டிருந்த சுந்தரரை அணுகிப் பரவையார் உள்ளக்