பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

5. வீ ர வா கு

சூரபதுமன் என்பான் மிக மிக வலியன். ஆயிரக் தெட்டு அண்டங்களுக்கு அதிபதி. அவன் தேவர் களுக்கு மிகவும் திங்கிழைத்தவன். அவர்களைச் சிறைப்படுத்தியவன். அவன் கடல் நடுவில் பல காவலைப் பெற்று விளங்கிய மகேந்திர புரத்துக்கு அதிபதி. அத்தகையவன் பெறற் கரியவரமும் திருவும் வாய்க்கப் பெற்றும், அவற்றைக்கொண்டு கன்முறை யில் வாழாமல் தருக்குற்றுச் செருக்குற்று வாழ்ந்து வரலான்ை. அன்னவனது அட்டகாசங்களைக் கேள்வி யுற்ற கந்தப் பெருமான். அவனேயும் அவனைச் சார்ந்த அசுரர்களையும் அழித்து விண்ணவர்களைச் சிறையி: னின்று விடுவித்து, அவர்களே முன்போல் விண்குடி ஏற்றத் திருவுள்ளங்கொண்டனன். முருகப்பெருமான் எண்ணியபடியே உடனே இயற்றும் போராற்றல் பெற்றிருந்தும், நீதி நெறியினின்றும் சிறிதும் தவறுதல் கூடாதென்று. முதலில் தூதன் ஒருவனேச் சூரபதும னிடம் போக்கி, தேவர்களே ச் சிறை நீக்குமாறு கூறுவோம். அதற்கு அச் சூரபதுமன் இசைந்திலன் எனில், அவைேடு போர் தொடுத்து, அவனேயும் அவன் இனத்தையும் மாய்ப்போம்' என்று தீர்மானித்து அறு