பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மக்களாகிய துரியோததிையர் பக்கம்ே சார்ந்து பேச அம்முன். கண்ணிலியாகிய திருதராட்டிரன் சஞ்சய முனிவர் வருகையைச் சொல்லக்கேட்டு அவர் திருவடி களே வணங்கிக் கீழ் வருமாறு கூறத் தொடங்கினன்.

"முனிவரே நீர் குருகுலத்து அரசர்களுக்குரிய தொழில்களைக் கற்பிக்கும் குரு ஆவீர். கெளரவர் பாண்டவர் ஆகிய இரு பிரிவினரும் நீர் கூறும் கூற்றை என்றும் மறுத்துப் பேசுபவர் அல்லர். இவர்கள் இப்பொழுது ஒருவர்க்கொருவர் பகைமைகொண்டு பலபடி பேசிக் கொள்கின்றனர். இவர்கட்கு இடையே யுள்ள பிணக்கை நீர்தாம் போக்கவேண்டும். அவ் விரோத மனப்பான்மை ஒழிந்து கெளரவர்கள் இவ் வுலகை ஆளுதற்கான வழி வகைகளே நீர் செய்ய வேண்டும். நீர் நேரே பஞ்சபாண்டவர்கள் உறை விடம் சென்று. அவர்களே மீண்டும் காட்டகமே சென்று அருந்தவங்களைச் செய்து கற்கதி அடையும் படி பகரவும் ' என்று சிறிதும் இரக்கம் இன்றிச் இசைத்தனன்.

சஞ்சய முனிவர் திருதாாட்டிரன் கூறிய கூற் றினைச் சிறிதும் மறுத்திலர். அப்படியே சென்று திருத ராட்டிரன் எண்ணத்தை இயம்பி வருவதாகக் கூறிப் புறப்பட்டார். புறப்பட்டவர் பாண்டவர் இருக்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். வந்தவர் முனிவர் ஆதலின் அவரை கன்முறையில் வரவேற்றனர். பாண்