பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

–59—

வேண்டும் ' என்று கழறினர். தருமரே இப்படிப் பேசத் தொடங்கினல் அவர்பின் தோன்றல்களான வீம அர்ச்சு ைநகுல சகாதேவர்கள் பேசுதற்குச் சொல்ல வேண்டுமா?

வீமன், முனிவரை நோக்கினன். முனிவரை நோக் கும்போதே அவன் கண்கள் சிவந்தன. இப்பொறி பறப்பனபோல் சில மொழிகளைப் பகரலானன். அப்போது அவன் விண்ட மொழிகள் உறுமேரு இடிப்பன போன்றிருந்தன. அவன் முனிவரை கோக்கி, முனிவரே, நீர் எங்கட்குப் பிரம்ம குருஆவிர். அப்படி இருக்க, நீர் எம் பகைவராகிய கெளரவர் சார்பில் பேசுதல் உமக்கு அடுக்குமோ? அத் துரியோதனதியர்தாம் நாங்கள் அனுப்பிய உலூகமா முனிவரிடம் போருக்குத் தாம் தயாராக இருப்பதாகக் கூறி அனுப்பியுள்ளாரே. எம்மூத்த தந்தையார் உம்முடம் கூறியனுப்பியவை தக்கவை அல்ல. அவர் தம் மக்களையும் எம்மையும் ஒரு படித்தாகக் கான வேண்டும். கம் முகத்தில் வலப்பக்கம் ஒரு கண்ணும் இடப்பக்கம் மற்ருெரு கண்ணும் இருந்தால் இவற் றிற்குள் உயர்வு தாழ்வு கருதலாமோ ? இவற்றினிடத் தில் வேற்றுமையைக் காணலாமோ ? அப்படி வேற். றுமை காண்பதுபோல அன்ருே இருக்கிறது இந்த ராட்டிரருடைய கருத்துரை? போர் முனையில் என் கதை கொண்டு மோதும் திறத்தை நீரே உம் கண்