69
—69–
முடிப்பரமன் விதுரர். மாளிகைக்குச் சென்றனன். நெடுமாலாம் மாயோன் வேறு எவர் விட்டிற்கும் செல் லாது தம் இல்லத்திற்கு வந்துற்றமையின் பொருட்டுப் பெருமகிழ்வு கொண்டனர் விதுரர். அம் மகிழ்வு காரணமாகக் கன்னனை நோக்கி, "கண்ணு. எனது சிறு குடிசையின் என்னென்று கருதிய்ை? நீ முன்னே உறங்கி யருளிய பாற்கடல் என்று கினே த்தனையோ f அல்லது உனது படுக்கையாகிய பாம்பணை என்று தினத்தனயோ அன்றி ஊழிக் காலத்தில் உறக்கங் கொள்ளும் ஆவ இல் என்ற எண்ணினயே கால் வகை வேதங்கட்கு உறைவிடம் என்று உணர்க் தனயோ? என் குடிசையில் எழுந்தருளியதற்கு என் இல்லம் பெரிய தவம் செய் திருக்க வேண்டுமென்ற கருத்தில்,
முன்ன மேதுயின் றருளிய முதுபயோ.ததியோ பன்ன காதிபப் பாயலோ பச்சைஆ லிலேயோ சொன்ன நால்வகைச் சுருதியோ கருதி எய்தற்கு என்ன மாதவம் செய்தது இச் சிறுகுடில்' என்ன?
இம் முறையில் உபசார மொழிகள் கூறப்பட்டு விருத்துணவும் கண்ணனுக்குப் படைக்கப்பட்டது. அன்று இரவு மாயோன் தான் வந்த சிரமம் நீங்க கன்கு உறங்கி மறுநாள் துரியன் அரச சபைக்குப் புறப்பட்டனன்.