பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவின் சிரிப்பு பூ, சிரிக்கிறது. ஓயாத சிரிப்பு: மாருத புன்முறு வல். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணத் தையும், மணத்தையும் அள்ளி வீசுகின்றது. இன் னிசை முரன்று வரும் வண்டுகளுக்குத் தேனை மோகன இளநகையோடு கொடுக்கிறது. அடடா அதன் வாழ்வு ஒரே இன்பம், கடைசி வரையில் களியாட்டம், அதிலும் காற்றுத் தேவன் வந்து உடலைத் தீண்டி விட்டால் அதன் இன்ப நடனத்திற்கு முடிவே இல்லை! அதைப் பார்க்கும்போது உள்ளத்திலே எனக்கு என்னவோ மாதிரி இருக்கிறது. நாமும் தானே படைப்பின் சிகரமாக இந்த உலகத்தில் இருக்கிருேம்? எத்தனை கவலைகள், எத்தனை சலிப்பு, எத்தனே தோய், எத்தனை துன்பம், எத்தனை பொருமை, பகைமை, எத்தனே பூசல்கள், சண்டைகள், கொடிய யுத்தங் கள்!-சே, எண்ணிப் பார்த்தால் நமக்கு அவமானமாக இல்லையா? காலேயில் மலர்ந்து மாலையில் சுருங்கி நிலத்தில் விழும் பூவுக்குக்கூட வாழத் தெரி கின்றது; வாழ்க்கையைத் துய்க்கத் தெரிகின்றது. நமக்கு அதன் அறிவுகூடி இல்லையா? பிறகு ஏன் இப்படிக் கவலைகளால் வாடுகின்ருேம்? ஏன் இப்படி ஒருவரை ஒருவர் நாசஞ் செய்துகொண்டு வாழ்க் கையை நஞ்சாகச் செய்கின்ருேம்? இத்தனை கவலைகள் நமக்கு மட்டும் எங்கிருந்து மு:ாேத்தன? இத்தனை போராட்டம் எதற்காக?