பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிமையின் வேண்டுகோள்

என்மனைக் கேகிடும் இவ்வழி அறிவேன்- மனைவியும் அங்கே வழிபார்த் திருப்பாள்; இரவெலாம் என்றனைக் காண தேங்கிக் கவலையால் உள்ளம் கசிந்தழு திருப்பாள்; குழந்தைகள் இரண்டும் குலை காய்ந் திருக்கும்; கண்ணீர் வடித்துக் கதறியே துடிக்கும். ஆயினும் அவ்விடம் போயென் செய்வது? கையினில் இருந்த காசெலாம் கடையிலே கள்ளின் வெறியிலே கரைந்து போய் விட்டது. வாய்வழிந் தோடிய பேய்க்கள் நனைத்திடத் தலைதனைப் பாதையில் சாய்த்துநான் இரவெலாம் உருண்டு கிடந்தேன் உணர்வில் லாமல்:- இந்தமு கந்தினைக் கொண்டு நான் இல்லம் எப்படிச் செல்வது ? என்னைக் கண்டதும் துயரெலாம் மறைத்துச் சிறுநகை காட்டி வந்தழைத் தேகும் மனைவியின் முன்னே வெறுங்கை நீட்டினல் பருக்கையும் வேகுமோ ? வாடிய வயிறுகள் மகிழ்ந்து நிறையுமோ ? அப்பா எனவரும் அருமைக் குஞ்சுகள் உப்புக் கூழும் உண்டிட லாகுமோ? சீச்சீ இந்தச் சிறுமையேன் செய்தேன்? மதியிழந் தொவ்வொருமாலையும் அந்தக் கடையினை நோக்கியே காலிழுக்கின்றது; காலையில் பிறக்கும் உறுதியும் கவலையும் மாலையில்மறைந்திடும்மாயமென் தெரியேன். மறைந்து மறைந்துநான் வளர்த்த இப் பழக்கம் இறுகப் பிடித்தெனை என்றும் அடிமையாய்ச்


            103