பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெலால் சென்

பெலால் சென் என்பவன் சரித்திர சம்பந்தமான வடநாட்டு வீரர்களில் ஒருவன். நெஞ்சத் துணிவும் நிகரில்லாப் போர்த் திறனும் வாய்ந்தவன். பல போர்களிலே வெற்றி கண்டவன். அவன் ஒரு இளமங்கையைக்காதலிக்கிறான்; அவளும்அவனைக்காதலிக்கிறாள் திருமணம் நடக்கிறது. பின்பு அவன் தன்னுடைய கோட்டையை விட்டுப் புதியதோர் போருக்குப் புறப்பட நேர்கிறது. காதலியின் நெஞ்சங் கலங்குகிறது: பாட்டு இங்கே தொடங்குகிறது.


"நெஞ்சுகலங் காதேயடி பெண்ணே-கண

நேரமதில் வென்றுமீள்வேன் 
கண்ணே

வெஞ்சமர மிதுபோலநேகம்-நான்

 வென்றதை நீ கண்டபின்னேன் 
 சோகம்?"

"சென்றபின்பு நாளுமென்றன்

நாதா-அமர்ச்
  சேதியிங் கனுப்பமுடி யாதா?”

என்றுமயில் நைந்துருக வேதான்-எண்ணி

  ஏதுரைப்பான் பெலால்சென், 
 "நீதான்

கண்டறிய வகையொன்று செய்வேன்-நானும்

  கையிலென் புறாவெடுத்துச் 
  செல்வேன்;

மண்டமரில் நான்மடிந்தால் மானே-உனை

  வந்தடையும் அந்தப்புறாத் 
  தானே.”

தந்துசொலிக் கந்துகத்தில் தாவ-அது தாண்டியது மங்கைமனம் நோவ.


           123