இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெலால் சென்
பெலால் சென் என்பவன் சரித்திர சம்பந்தமான வடநாட்டு வீரர்களில் ஒருவன். நெஞ்சத் துணிவும் நிகரில்லாப் போர்த் திறனும் வாய்ந்தவன். பல போர்களிலே வெற்றி கண்டவன். அவன் ஒரு இளமங்கையைக்காதலிக்கிறான்; அவளும்அவனைக்காதலிக்கிறாள் திருமணம் நடக்கிறது. பின்பு அவன் தன்னுடைய கோட்டையை விட்டுப் புதியதோர் போருக்குப் புறப்பட நேர்கிறது. காதலியின் நெஞ்சங் கலங்குகிறது: பாட்டு இங்கே தொடங்குகிறது.
"நெஞ்சுகலங் காதேயடி பெண்ணே-கண
நேரமதில் வென்றுமீள்வேன் கண்ணே
வெஞ்சமர மிதுபோலநேகம்-நான்
வென்றதை நீ கண்டபின்னேன் சோகம்?"
"சென்றபின்பு நாளுமென்றன்
நாதா-அமர்ச் சேதியிங் கனுப்பமுடி யாதா?”
என்றுமயில் நைந்துருக வேதான்-எண்ணி
ஏதுரைப்பான் பெலால்சென், "நீதான்
கண்டறிய வகையொன்று செய்வேன்-நானும்
கையிலென் புறாவெடுத்துச் செல்வேன்;
மண்டமரில் நான்மடிந்தால் மானே-உனை
வந்தடையும் அந்தப்புறாத் தானே.”
தந்துசொலிக் கந்துகத்தில் தாவ-அது தாண்டியது மங்கைமனம் நோவ.
123