பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாழியொன்று



நாழியொன்று தானிருக்கும்-அன்று
நானுமுன்னைப் பார்த்த தெலாம்
ஆழிவிழியாலே என்றன்-உளம்
அஞ்சிறையில் வீழ்ந்த தன்றே
சிந்தைதனை மீட்டிடவே இனிச்
செய்யும் வகை யொன்றுமில்லை நொந்துயிர்த்து வாடுகின்றேன்-ஒரு
நொடியும் உனை மறந்தறியேன்
தேகமது சோர்ந்ததனால்-வரும்
சிறுதுயிலும் உன் கனவே பாகுமொழியால் நீயும்-எனது
படர்களைய வேணு மின்றே.


171