பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதம் இன்பத் தமிழின் சுவையே அமுதம் எழில்சேர் கலையின் வடிவே அமுதம் அன்புப் பணியால் மலரும் கண்கள் அழகாய் வீசும் ஒளியே அமுதம் துன்பந் தீர்க்கத் துணிவாய் நீளும் தூய்மைக் கையின் தீண்டல் அமுதம் நன்பும் மகிழ்வும் எங்கும் பொங்க நன்றே நாடும் இதயம் அமுதம்! 172