பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தனன் அன்ன இரணகளந் தன்னில் இடியெனச் சிரித்துக் கரமலர் தாங்கிய கடிவா ளுடனே அடிமலர் திங்கள்போல் அமுதினை வழங்க வடிஅழ குடனே வந்தனள் அன்னை: நயனம் அனல் பொங்க நரசிர மாலை பிறங்க அசுரர் உடல் நசுங்க ஆடி வரு கின்ருள் கொதிகடல் எழுந்த ஆம்பல்போல் குருதி படிந்த மேனியள் பதமலர் அன்பொடு வாழ்த்தியே பசுபதி பரவிடும் மொய்ம்பினள் அன்னை காளி பயங்க்ரி அகில லோகமு மாக்குவாள் கன்னி வந்தனள் போற்றுவோம் கால காலிநீ வாழ்கென்றே! 203