பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 உன் குரல் எத்தனையோ சொல்மாரி எத்தனையோ புலமையுரை எத்தனையோ நூல்விளக்கம் எனக்குழப்ப மிகவலுத்தேன் ; எத்தனையோ திருத்தலங்கள் எத்தனையோ தீர்த்தங்கள் எத்தனையோ மூர்த்தங்கள் அத்தனையும் பார்த்தயர்ந்தேன்; வாணவெளித் தாரகையில் வளர்நீல வாரிதியில் மோனமலைக் காட்சியினில் முகையவிழும் மலர்வனப்பில் உன்குரலைச் செவிமடுக்கும் உணர்வின்றி அலமந்தேன் என்னிருளைப் போக்கவினி ஏதுசெய்வாய் அன்பொளியே ?