இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
அதுவா வெகுதூரம்
"குங்மப் பொட்டணிந்து
கூடைதலை மேல்வைத்தே பொங்கும்நகைப் பால்காரி அங்கலசம் சிறிதசைய எங்கோதான் செல்லுகின்றாய் எனக்கறியக் கூறாயோ?”
"அதுவா வெகுதூரம்
இதுநாளும் போயறியேன்.”
"வார்த்தை மிகப்பொழிந்து
மன்பதையின் மனங்குழப்பிக் கீர்த்திமலை ஏறிநிற்கும் கீழ்மேல்நாட் டரசியலின் மூர்த்திகளே நீர்நவிலும் மோகனநா டெதுசொல்வீர்". "அதுவா எதுவென்றே அறிவதற்கு நேரமெங்கே ?”
"அண்டமுக டதன்மேலும்,
அணுக்கருவின் உள்ளேயும்
கண்டறிந்த சேதிகளைக்
காட்டிவரும் விஞ்ஞானீ.
43