இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்ன கையின்
1
அன்னை கையின் விலங்ககன்ற
அருமை நாளும் வந்தது:
ஆடிப்பாடி வாழ்க வென்று
அண்ட மெட்ட ஓதுவோம்.
பொன்னின் மகுடம் இந்தியத்தாய்
புனைந்த நாளும் வந்தது
போற்றிப் பாடி ஜெய் ஹிந் தென்று
பூமி யதிர முழங்குவோம்.
2
பாரதத்தின் சிறுமை யெல்லாம்
பஞ்சு போலப் பறந்ததே;
பாருக் கெல்லாம் கண்ணிதென்று
பகரும்நாளும் வந்ததே.
வீர தீரம் அன்பு ஞானம்'
மிகுந் திருக்கும் மக்கள் யாம்
மெய்ம்மை நூல்கள் பலவுங் கண்ட
மேலோர் வழியில் வந்தவர்.
3
அடிமை வாழ்வில் நொந்த போது
ஆன சிறுமைக் குறையெலாம்
அகல வென்று திறமையோடு
அற்புதங்கள் ஆற்றுவோம்.
76