14
அன்னையையும் நாடார்! ஆசை
தனை நாடார்!
நாடொன்றே நாடித்தன் நல
மொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்!...
நாடினேன்!...
...ஜனநாயகத்தோடு
சமதருமம் பூத்துத் தழைக்கும்
வழிதேர்ந்தேன்!
புதிராகநின்று போயதெல்லாம்
போயொழிய
எதிர்காலம் கண்டேன்! என்
தலைவன் தத்துவத்தைப்
பாடினேன்! வாழ்க! பாண்டியனார்
நந்நாட்டு
என் தலைவன் வாழ்க!...
கவிஞர் கண்ணதாசனின் ‘பார்வை’யில் அற்புதம் நிகழ்ந்துவிடும்!
பூதான இயக்கத்தின் தலைவர் முன்னம் குறிப்பிட்ட மாதிரி, திருமிகு காமராஜ் அவர்களே காங்கிரஸின் இதயம்!
அமெரிக்க நாட்டின் சோஷலிஸ மேதை ஒருவர், “அரசியல் என்பது சாதுர்யமான ஒரு வித்தை,” என்றார்,
ஆனால் காமராஜ் அவர்கள் எப்போதுமே வித்தை காட்டியது இல்லை; வித்தை காட்ட விழைந்ததும் இல்லை; வித்தை காட்டவேண்டிய அவசியம் கொண்டதும் கிடையாது. ஆனால், அரசியல் வித்தையாடிகளின் வித்தைகளைப் பார்க்கும் பார்வையாளராக இருப்பார்.