இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15
போலி வித்தையாடிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தி விடும் இரும்பு மனிதர் அவர்!..
நாட்டின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் சர்வபரித் தியாகம் செய்யவல்ல உள்ளங்களுக்குக் காமராஜ் ஒரு சீரிய வழிகாட்டி!
‘தியாக வேள்வியில்’ பூத்த பாரிஜாதம் காமராஜ்!
பதவிப் பித்துக்கொண்ட போலிகளுக்குக் காம்ராஜ் ஓர் எச்சரிக்கை!
அநீதியை அழிக்கும் நீதிதேவன் காமராஜ்!
நாட்டின் பொது அமைதிக்குப் பங்கம்விளைவிக்கும் தீய சக்திகளுக்கு காமராஜ் ஓர் அபாய அறிவிப்பு!
ஏழை எளியவர்களுக்குக் காமராஜ் கண்கண்ட ஒரு தெய்வம் - தெய்வமனிதர்!
வாய்ச்சொல் வீரர்களுக்குக் காமராஜ் ஒரு சிம்ம சொப்பனம் உலக நாடுகளின் நல்ல மனிதர்களுக்குக் காமராஜ் ஓர் அதிசய மனிதர்!
சத்தியத்தின் தேவன் அவர்!
தன்னை அழித்துக்கொண்டு மணக்கும் சந்தனக் கட்டை.
தர்மமிகு காமராஜ் அதற்குச் சமதை!