பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பாரத மண்ணைத் துளியளவேனும் எதிரிகள் கைப்பற்ற இடம் கொடாத கொள்கை வீரர் அவர்!

ஆம், பாரதத் தாயின் இனிய நற்கனவாக இன்று காமராஜ் பொலிவுற்றுத் திகழ்கிறார்!

காமராஜ்—தமிழ் நாட்டுக் காந்திஜி!

காமராஜ்—நேருஜியின் நிதர்சனமான ஆன்மா!

இந்திய ஜனநாயக சோஷலிஸ்க் குடியரசுத் தத்துவத்துக்குக் காமராஜ் ஓர் உதாரணம்!

இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அனுபவபூர்வமான உண்மைக்குக் காமராஜ் ஓர் உதாரணம்!

"நாம் தீவிரமான நடவடிக்கைகளை மேற் கொண்டால்தான் நமது பொருளாதார, சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். நமது மக்கள் பயனடைய வேண்டும் என்பது நம் பொருளாதாரத் திட்டத்தின் நோக்கம். இந்த நன்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைத்தாகவேண்டும். ஏழ்மை, அறியாமை, நோய் முதலிய கேடுபாடுகள் நமது முக்கிய விரோதிகள். இவை அகற்றப்படும் வரை நாம் அயராது தொடர்ந்து பாடுபட வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் நலனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் நாளாகும். வெற்றிகளையும் தோல்விகளையும் நாம் கணக்கிட்டுப் பார்த்துவிட்டு, முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த பெரியார்களை நாம் இன்று மனதார நினைத்து அஞ்சலி செலுத்த வேண்டும். பெயர் தெரியாத லட்சக்