பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

129

நான் இரவு தங்குவதற்கு இல்லை முன்னைப் போல என் நிலைமை இபபோது இல்லை எந்த நிமிடமும் போலீசில் சிக்கலாம் சிக்கினால் எனக்கு சிறைதான். அதனால் அருணகிரியை, மனைவியின் அண்ணன் பரமகுருவிடம் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். இரண்டு நாளில் ஊருக்குப் போய் விடுவார்கள்.

அருணகிரியை பார்க்க வேண்டுமென்று வந்தேன். பிறகு நாங்கள் எங்கேயோ புறப்பட்டு எப்படியோ இங்கு வந்து விட்டோம். நீ எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும் லிசியா,” என்றான் விஜயன்.

ஒரு தென்னந் தோப்பில் தலைமறைவாக இருந்து வருகிறேன் இரவு அங்கு போய்ச் சேராவிட்டால் நண்பர்கள் கவலைப்படுவார்கள்

அருணகிரியை உன் பொறுப்பில் விடுகிறேன். இன்று ஒரு இரவு இங்கு தங்கியிருக்கட்டும். விடிந்து அவனை ஹார்பர் ரோடில் உள்ள எலிசபெத் ஓட்டலில் கொண்டு போய் விட்டு விடு. நான் புறப்படலாமா லிசியா,” என்றான் விஜயன்.

லிசியா, “நீ தைரியமாக போய் வா அண்ணா. நீ சொன்னபடியே செய்கிறேன்; கவலைப் படாதே,” என்று சொன்னாள்.