பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தென்னைமரத் தீவினிலே...

பொன்னம்பலம் போனை வைத்துவிட்டு பரமகுருவைப் பார்த்தார்.

“மலேசியாவிலே ஒரு ரப்பர் தோட்டம், சீப்பா வந்திருக்கு என்று நம்ம ஏஜன்ட் சொன்னான். ஒரு மாசமா பேரம் பேசி, இன்னிக்குதான் பார்ட்டியை சரிக்கட்டி முடிச்சிருக்கான். நான் அவசியம் உடனே சிங்கப்பூர் போயாகனும் பரமு. நீங்க எல்லாம் வந்திருக்கிற இந்த சமயம் பார்த்து கூட இருக்க முடியாமல்...”

“அதைப்பற்றி என்ன மாமா? பிசினஸ்தான் முக்கியம். உடனே புறப்பட்டுப்போய் முதல்லே முடிங்க. விஷ்யூ பெஸ்ட் ஆப் லக்,” என்றார் பரமகுரு.

“ரொம்ப நன்றி பரமு. ஆனா இது, தவணையிலே வாங்கற பார்ட்டி இல்லே. இந்த ஒரு மாசமா இழுபறியிலே இருந்த பேரம் இப்பத்தான் படிஞ்சு வந்திருக்கிறது. நல்ல பிசினஸ். எங்கே கையை விட்டுப் போயிடுமோன்னு ரொம்ப கவலையா இருந்தேன். எல்லாம் நீ வந்த வேளை தான் கைகூடி வந்திருக்கு,” என்றார் மாமா.