பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
சிவப்பு ஆற்றில் வள்ளி மலர்....

வள்ளியம்மை அன்று எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தாள். விமான நிலையத்தில் அண்ணனையும், பெரியம்மாவையும் இப்படித் தனியே சந்தித்து, மனம் திறந்து உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அண்ணன் தான் அப்படி என்றால், அண்ணன் குழந்தைகள் பாபுவையும், ராதாவைவும் அவளால் மறக்கவே முடியவில்லை. அருணகிரியையும் அல்லவா தங்களுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்!

பை நிறைய பழங்களையும், பிஸ்கட்டுகளையும் போட்டுக் கொடுத்தது போதாதென்று, ஒரு கட்டு நோட்டையுமல்லவா சோப்புக் கட்டி மாதிரி அண்ணன் போட்டுத் தந்திருக்கிறார்.

அருணகிரி இப்போது அவர்களுடன் காரில் சென்று கொண்டிருப்பான். பாவம்! அவன் இப்படி என்னை விட்டு அவர்களுடன் போக