உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 283 "ஆமாம், அதுதான் சரி" என்று நடுக்கத்துடன் கூறிக் கொண்டே உறங்காப்புலி கர்னலின் கட்டிலறைக்குள் ஓடிக் கதவைத் தாழிட்டுக் கொண்டான். துரோகம் பதுங்கிக் கொண்டது. தொலைவில் குதிரைகள் வேகமாக வரும் குளம்படிச் சப்தம் கர்னலின் காதுகளில் விழுந்தது. கர்னல் அக்னியூ அந்த ஊர்ப் பாதுகாப்பை ஏற்றிருந்த காப்டன் ஸ்மித் என்பானை உடனடியாக அழைத்து வரச் சொன்னான். காப்டன் ஸ்மித் வந்தவுடன் கர்னல் வழங்கிய ஆலோசனை அவனது மூளையின் ஆற்றலுக்கு ஒரு முதல் தரமான எடுத்துக் காட்டாக இருந்தது. "மிஸ்டர் ஸ்மித்! நீங்கள் மாத்திரம் தனியாகக் குதிரையில் செல்லுங்கள்! ஆத்திரமாக வரும் வைரமுத்தனை அன்போடு வரவேற்று என்னிடம் அழைத்து வாருங்கள்! மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன். " கர்னலின் யோசனைப்படியே கேப்டன் செய்தான். வைரமுத்தனுக்கு அந்த நிகழ்ச்சி ஆச்சரியத்தைத் தந்தது. என்றாலும் எதற்கும் தயார் நிலையில் தன்னுடன் வந்த வீரர்களுடன்தான் உள்ளே வர இயலும் என்று நிபந்தனை விதித்தான். கேப்டன் ஸ்மித் அதற்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அக்னியூ உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு அருகே வைரமுத்தனுக்கு ஒரு நாற்காலியைக் காட்டி உட்கார வைத்துவிட்டு கேப்டன் ஸ்மித் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டான். வைரமுத்தனுடன் வந்த வீரர்கள் சற்றுத் தொலைவிலேயே நின்றுகொண்டு தங்கள் தலைவனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாமல் வைத்த விழி வாங்காமல் கவனித்துக் கொண்டிருந்தனர். "சௌக்யந்தானா?