உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 "அத்தான்!"" கலைஞர் மு. கருணாநிதி மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்த அந்த உயிர் மூச்சோடு இழைந்த சுவைமலிந்த சுளைச் சொற்கள், யாழின் கம்பிகளாய் அதிர்ந்தன. பிறகு மௌனம், யார் அணைத்தார்கள் என்று தெரியாது: அறையில் கட்டிலோரமாக இருந்த விளக்கு இருட்டுக்கு வழிவிடுத்து விடை பெற்றுக் கொண்டது! இருவரிடை சிக்கிக் கொண்ட கட்டில் மட்டும் வாய் திறந்து எதுவும் பேச முடியாமல் அவர்களை 'மனத்தால்' வாழ்த்தியவாறு- தனது வலியை மட்டும் "முனகல்' வாயிலாக் காட்டிக் கொண்டது!