உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 39 கொண்டிருந்த எரிமலையிலிருந்து திடீரெனக் குளிர் யுனல் அருவி கொட்டுவதுண்டோ? உண்டு என்பதற்கு உதாரணம்தான் வாளுக்குவேலியின் கண்ணீர் போலும்! அவனைத் தூக்கி ஆரத் தழுவிக் கொண்டான். தம்பீ! உன்னைப் பலமாக அடித்து விட்டேன்! உனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தால் இப்படித்தானே கண்டித்திருப்பான் என்று எண்ணிக் கொள்ளடா தம்பீ! இதோ இந்தக் கறுத்த ஆதப்பனைத்தான் இப்போது நான் அடித்தேன். புரிகிறதா நான் சொல்வது?" வாளுக்குவேலியின் குரல் தழுதழுத்தது! சாமீ! என்னோட மூத்த மகன் என்னோட இளைய மகனைத் தண்டிச்சதாகக்தான் நான் நினைச்சுக்கிறேன்." ஆதப்பன் குறுக்கிட்டு "அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள் அம்மா" எனக் கூறிக் கண்ணீர் வழிந்த முகங்களில் களிப்பு நடனமாடச் செய்தான்! சிரித்துக் கொண்டே வாளுக்கு வேலி ஆதப்பனிடம் நெருங்கி ' 'அண்ணன் தம்பிகூட உதவ மாட்டானா? அப்படின்னா உனக்கு அடிதான் உதவுமா" என்று கையை ஓங்கினான். 'நீர் இடித்தா நீர் விலகிவிடும்? நன்றாக அடியுங்கள் அண்ணா என்றாள் ஆதப்பன் மகிழ்ச்சி பெருக்கெடுத்திட! சோகத்தில் முளைவிட்டு, வேகத்தில் அரும்பிய வீட்டு வாசல் நிகழ்ச்சி, ஆனந்தத்தில் மலர்ந்து மணம் வீசியது! “நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க! சரசுவதி, லட்சுமி மாதிரி. ரெண்டு பேருக்கும் பெண்ஜாதிங்க அமையணும்னு பகவானை வேண்டிக்கிறேன்.