இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
மன்னர்கள் மக்கள் தலைவர்கள்; போர்க் களங்களில் முன் நின்று உயிர் விடுவர்;வீரர்கள் அவர்கள்.
மக்களைத் தம் உயிர் என மதித்தனர் ; அதனால் தேர்தல் களங்கள் தேவைப்படவில்லை ; சேஷனுக்கு அங்கு விசேஷம் தரப்படவில்லை.
தசரதன் குறை
ஒருத்திக்கு மூவர் அவனுக்கு மனைவியர்;எனினும் விருத்திக்கு ஒரு பிள்ளை அவர்கள் கருதரிக்கவில்லை ; அது அவனுக்குக் கவலைதந்தது.
வசிட்டர் அவன் குலகுரு ; அரசியலுக்கு அமைச்சர் தேவைப்பட்டனர் : இது குடும்ப விளக்குப் பற்றிய விமர்சனம்; அதனால் குருவிடம் விளக்கம் கேட்டனர்.
பூஜைகள் சடங்குகள் இப்படி ஏதாவது செய்தால் குழந்தை பிறக்கும் என்று அவர்களுக்கு அறிவுரை தந்தார் ; அது அந்தக் காலத்து வழக்கம் என்று தெரிகிறது.
குழந்தை வேட்கை வேண்டி வேள்வி செய்தால் குழந்தை பிறக்கும் என்றுஅவர்அறிவித்தார்.