|19
மதம் வாழ்க்கையில் ஒரு கூறு.
அதுவே வாழ்க்கை என்று கொண்டால்
அது முழுக்க முழுக்க மதுச் சாறு :
"கிக் வராமல் பார்த்துக் கொள்வது தக்கது.
கல்லூரிகளில் ஒவ்வொரு விடுதிகளில்
ஒரு பெயர் புதிது எழுதப்படுகிறது ;
கவிஞர்களைப் போற்றுகிறார்கள் ; அதனால்
கம்பர் இல்லம், இளங்கோ வளாகம்
என்று அவர்களுக்குத் தங்க வீடு தருகின்றனர்.
ஊர்களின் பெயர்கள் அவை
மறு பிறவிகள் எடுக்கின்றன ;
பம்பாய் மும்பை ஆகிவிட்டது.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
அது நமக்குத் தெரியாது.
நேரு நகர் காந்தி நகர்
இவர்கள் பெயரில் மாநகர்களை
உரிமை செய்து தந்திருக்கிறார்கள் ,
புதிய பெயர்கள் இடம் பெறுகின்றன ;
மதராஸ் சென்னை ஆகிவிட்டது.
காமாச்சிரமம் என்று ஒரு
பெயர் ஒரு ஆசிரமத்துக்கு
வழங்கியது ; இவர் யார் ?
சிறை சென்று செக்கிழுத்த செம்மலா ?
காதல் மன்னன் , டியூயட் நாட்டியன் ;
அவனை மதித்துப் போற்றினர்.