21
தண்டக வனம் என்ற இடத்தை
மூவரும் அடைந்தனர் ; அது
ஒரு கண்டனக் காடு ;
மரங்கள் உலர்ந்து கிடந்தன.
எங்கும் எலும்பும் கூடுகளும்
சிதறிக் கிடந்தன ; சுடுகாட்டுச்
சூழல் அது என்று அவர்களுக்கு
அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்தச் சூழலுக்கு யார்
காரணம் ? இப்படிக் கொலைகள்
செய்து அலைவுறுத்தியது யார் ?
இந்த வினாவை இருவரும்
கேட்டனர் விடை கூறுவதற்கு
முன் பதில் அங்கு வந்து நின்றது.
குண்டு வடிவத்தில் ஒருத்தி
உருண்டு அங்கு வந்து நின்றாள் ;
குண்டோதரி என்று அவளை
அழைக்கலாம் : பயங்கரவாதி :
தாடகை என்பது அவள் பெயர்.
அங்கிருந்த தவசிகளை, வழிப்
போக்கர்களை அடித்து வீழ்த்தியவள ;
அக்கிரமங்களை ஆதியோடு அந்தமாகச் செய்தவள்.
தவசிகள் வேள்விகள் செய்வதை
அவள் தடுத்து ஒழித்தாள் ;
இது கலாச்சாரப் போராட்டம்,
அவை தேவையற்றவை என்பது அவள் கருத்து ;
தவசிகள் காட்டில் ஆக்கிரமிப்பதைத் தடுத்தாள்.