பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்த்மிழ்க் கலே வித்தகர் அவ்வை தி. க ஷண்முகம் எம். எல். சி. அவர்கள் ஆசிரியர் திரு நாரண- துரைக்கண்ணன் அவர்கள் என் அன்புக்கும், பெரு மதிப்புக்குமுரிய நண்பர். பழம் பெரும் எழுத்தாளர்.

  • ஆனந்தபோதினி’, 'பிரசண்ட விகடன்’ ஆகிய இலக் கிய ஏடுகளின் ஆசிரியராக விளங்கிப் புகழ் பெற்றவர்.

நெஞ்சையள்ளும் நாவல்கள், நீதியை வலியுறுத்தும் சிறு கதைகள், நாட்டுக் குழைத்த நல்லவர்களின் வரலாறுகள், நற் பயன் தரும் நாடகங்கன் ஆகிய பல்வேறு இலக்கியச் செல்வங்களைத் தமிழுலகுக்குத் தந்த இலக்கிய மேதை. இவருடைய உயிரோவியம்’ எங்கள் நாடக மேடைக்குப் பெருமை சேர்த்த நாடகங்களிலே ஒன்ருகும். தாய் மொழி யாகிய தமிழின் மேல் இவருக்குள்ள ஆழ்ந்த பற்றும், சமுதாய முற் போக்கிலே இவர் கொண்டுள்ள சீரிய எண்ணங்களும், இவர் படைத்த இலக்கியங்களிலே ஒளி வீசுவதைக்காணலாம். தெய்வப் புலவர் திருவள்ளுவர். இவரது அருமையான படைப்புகளிலே ஒன்ருகும். இந்நாடக நூலப் படைத்ததன் மூலம் ஆசிரியர் நமது பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரிய சாகிருர், - தமிழ் மறையாகிய திருக்குறளுக்கும் அதனை இயற்றிய திருவள்ளுவப் பெருமானுக்கும் தனிச் சிறப்புக் கிடைத் துள்ள இன்றைய சூழலில் ஆசிரியரின் திருவள்ளுவர்? நாடக நூல் வெளி வருவது பெருமைக்குரியதாகும். திரு. நாரண - துரைக்கண்ணன் அவர்கள் புலவர் புராணம், விநோதரச மஞ்சரி முதலிய பழைய நூல்களின்