பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 121 போவதும் இல்லை. எனக்குத் திருமணம் ஆனபின் என் மனைவியுடன் மட்டுமே பழகுவேன். இது உறுதி!' என்று கூறிக் கடிதத்தை அன்றிலிடம் தந்துவிட்டு அறவணன் அங்கிருந்து நடையைக் கட்டினார். இருவருள் ஒருவரும் - சிற்றுண்டி கிடக்கட்டும் - வெறுந் தண்ணீர்கூட அருந்தவில்லை. இவர்களுக்காகப் புகைவண்டி புறப்படாமல் காத்துக்கொண்டிருக்குமா என்ன? அன்றிலும் அறவணனும் தனித்தனியே வண்டியில் அவரவர் இடத்தில் சென்று அமர்வதற்கும் வண்டி நகர்வதற்கும் நேரம் சரியாயிருந்தது. இருவரும் உரிய நேரத்தில் அவரவர் ஊர் போய்ச் சேர்ந்தனர்.