பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சுந்தர சண்முகனார் அதே சமயத்தில், இந்தப் பேர்வழி இறங்குகிறார் போலும் என்று அன்றிலும் அறவணனைப் பார்த்தாள். ஒருவரை யொருவர் பார்ப்பது தெரியவே, யாருமே சரியாய்ப் பார்க்காமல் அரைகுறையாய்ப் பார்வையைத் திருப்பிக் கொண்டனர். . . . 3-30 மணிக்கு வண்டி சென்னை எழும்பூர்ப் பெரு நிலையத்தை வந்தடைந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை யாதலால், கடைத் தெருக்கள் வெறிச்சோடியிருந்தாலும், அந்தப் புகைவண்டி நிலையம் oஅன்று கலகலப்பாகவே யிருந்தது. அங்கேதான் அன்றில் இறங்கினாள். வண்டி அதற்குமேல் போகாது - எல்லோருமே இறங்கிக் கொள்ள வேண்டியதுதானே.