பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 45 உணவுக்காகச் சிற்றுண்டிகள் சிலவற்றை விருத்தாசலம் சந்திப்பிலேயே அன்றில் வாங்கி வைத்துக் கொண்டாள். அவள் வீட்டிற்குச் சென்று இரவு பதினொரு மணிக்குமேல் கூடச் சாப்பிடலாம்-திரைப்படம் பார்த்து விட்டு வந்து சாப்பிடவில்லையா? - மேலும் அவள் இந்த வண்டியில் வந்து விடுவாள் என்பதும் வீட்டாருக்குத் தெரியும். ஆனால் அறவணனுக்காகவே அவள் சிற்றுண்டி ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டாள். எட்டுமணியளவில், வண்டியை விட்டு இறங்கத் தேவை யில்லாமலேயே இரவு உணவு முடிந்தது. அறவணனுக்கு எப்படியாவது ஏதாவது கொஞ்சம் பணம் கொடுத்தனுப்ப வேண்டும் என அன்றில் முயன்றாள். அதற்கேற்றவாறு பேச்சைத் தொடர்ந்தாள்: நீங்கள் இன்றிரவு திருச்சியில் எங்கே போய்த் தங்குவீர்கள்?' "எங்கேயாவது பார்த்துத் தங்க வேண்டியதுதான்'. ' 'திருச்சியில் தங்கியிருக்கும்போது வேண்டிய செலவிற் கும், பிறகு காரைக்குடி போக வண்டிச் செலவிற்கும் பணத்திற்கு என்ன செய்வீர்கள்?’’ . தெரிந்தவர் யாரையாவது பார்த்துக் கேட்க வேண்டியது தான்'. நான் கொஞ்சம் பணம் தருகிறேன். தயை செய்து மறுக்காமல் பெற்றுக்கொள்ளுங்களேன்.' உங்கள் உதவி மனப்பான்மைக்காக மிகவும் நன்றி! தயை செய்து என்னை மன்னிக்கவேண்டும். எனக்காக நீங்கள் கவலைப்படவேண்டாம்.திருச்சி சந்திப்பில் உறவினர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நான் வேண்டியதை வாங்கிக்