பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை மலர்மணம் என்னும் புதினம் ஒன்றை யான் 1960ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டேன். அது இரண்டு பதிப்பு பெற்றது. 1961ஆம் ஆண்டு தெய்விகத் திருமணம்' என்னும் இந்தப் புதினத்தை எழுதினேன். இது 1962ஆம் ஆண்டி லேயே வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு மூளைக்கட்டி நோய் (Brain Tumour) 1961ஆம் ஆண்டின் இறுதியிலேயே தொல்லை தரத் தொடங்கிவிட்டதால் இந்த நூல் வெளியீடு நின்றுபோய் விட்டது. 1962ஆம் ஆண்டு முழுதும் படுக்கையில் கிடந்து செத்துப் பிழைத்தேன். பின்பு இந்நூலை வெளியிடுவதில் கருத்து செலுத்தாமல் ஆய்வு நூல்கள் எழுதத் தொடங்கி விட்டேன். அண்மையில் வேறொன்றைத் தேடியபோது இந்நூலின் கையெழுத்துப் படி தென்பட்டது. தமிழ் படித்த வெளிநாட்டினரைப் பேட்டி காண்பவர் 'நீங்கள் எந்த எந்த நூலை விரும்பிப் படித்தீர்கள் என வினவின், அவர்கள், யார் யாரோ எழுதிய புதினங்களைக் குறிப்பிடுவதைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன். இதையும் உள்ளத்தில் கொண்டு இந்தப் புதினத்தை வெளியிடலானேன். -