பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விழியுள்ளவர்கள் பார்க்கின்ற யானையாக இன்று விளையாட்டுத்துறை வந்திருக்கிறது. விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் இன்று இளைஞர்களை வழிநடத்திக் கொண்டிருக் கிறது. வருங்காலம் நல்ல வலிமையுடையவர்களுக்கான காலம்; சோம்பேறிக் கூட்டம் இனி சொகுசு வாழ்க்கை வாழ முடியாது என்று உணர்த்தி வருகின்ற எதிர்காலத்தை எதிர் கொள்ள விளையாட்டுத்துறை தான் வழிகாட்டும் என்ற நம்பிக்கையில், இந்த உலகம் ஏற்றுக் கொண்டு செயல்படும் காலமாக முன்னேறிவருகிறது நாட்டுக்காக இல்லையென்றாலும். நமக்காகவாவது உடவத்தியமாக திறமாக தரமாக வைத்துக் கொள்வோம் என்ற உறுதியை இன்றே எடுத்துக் கொள்வோம் அதற்கேற்ற ஆதாரங்களை நிறைய வைத்திருக்கின்ற இந்த தலை உங்களிடம் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சியடை கிறேன். நிறைய பயன்களை வழங்கும் இந்த நூலை அழகுற அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டார்சுக்கும், ஆக்க வேலை களுக்கு உதனிய ஆர்.ஆதாம் சாக்ரடீசுக்கும் எனது பூர்வமான நன்றி த1 எனது விளையாட்டுத்துறை இலக்கிய நூல்களைப் படித்து. எனக்கு ஆதரவளித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான பன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானமலர் இல்லம் எஸ். நவராஜ் செல்லையா சென்னை 17 22.2.88