பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் ஒளி 217 耶L விடுகின்ற உன்னுடைய முக மண்டலத்தை என் நெஞ்சிற்குக் காட்டாயோ? - பார்த்தீர்களா மகாராஜா? உளறல் அதிகமாகி விட்டது. இன்னும் உங்களுக்குச் சந்தேகமிருந்தால் மேலும் ஏதாவது கேட்டுப்பாருங்கள் இவனை. அமை : துரியாதீத நிலையில் ஆனந்தம் அநுபவிக்கின்ற ساتل சர 斯L இவரிடத்தில் வேறு என்ன கேட்க முடியும்? பரம்பரையாக வருகின்ற பட்டர் குலத்தில் பிறந்தவன்தானே இவன்? சாஸ்திரமெல்லாம் படிச்சவன்னு எல்லாரும் சொல்கிறார்களே! இன்றைக்கு என்ன திதி என்று வேனுமானால் கேட்டுப் பாருங்களேன்? சாஸ்திரம் படித்தவரைச் சோதனை செய்வதற்கு இதுதானா கேள்வி: சாஸ்திர சம்பந்தமான கேள்வி ஏதாவது கேளும் பட்டரே.

(அசட்டுச் சிரிப்புடன் சாஸ்திரத்தைப்பற்றி எனக்கே

அதிகமாகத் தெரியாது. ஆனால், இவன் மது மயக்கத்தில் இருக்கிறான் என்கிறதை நிரூபிக்கிறத் துக்கு இன்னைக்கு என்ன திதி என்று வேண்டுமானால் கேளுங்கள். அமை : அதுவும் சரி, அபிராமி பட்டரே, &লাগpঙ্গত என்ன அபி திதி தெரியுமா? எவ்வளவு நாழிகை மீதம் இருக்கிறது? சொல்லும் பார்க்கலாம்?

சுத்த பூர்ணிமை-பெளர்ணிமை.

|bi- : (வெற்றிச் சிரிப்புடன்) அரசே, பார்த்தீர்களா? - நல்ல முழு அமாவாசையான இன்றைக்கு அபிராமி பட்டனுக்குப் பெளர்ணமியாம். எவ்வளவு போதை இருந்தால் இப்படி உளறுவான்!.