பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்வாழ்ககை 15 கொடுத்து உண்பவனுடைய வாழ்க்கை தொடர்ந்து நல்ல விதமாக கடக்கும் என்பது வள்ளுவரின் வாய்மொழி இஃது என்னே விந்தை உலக நடை ஒன்றும் திருவள்ளுவர்க்குத் தெரியாது போலும் ! என்று வியக்கலாம் சிலர். ஏன் ? கெட்டவழியில் பொருள் தேடாவிட்டால் பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் அளவு பொருள் சேர்வது எப்படி P நல்ல வழியில் பொருள் தேடும் நல்லோர் சிலர், தம்மையே நன்கு பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்ருர்களே! அவர்கள் பலர்க்கும் பகுத்துக்கொடுப்பது எப்படி செல்வம் சேர்ந்திருந்தாலும், பலர் க்கும் பகுத்துக்கொடுத்துக் கொண்டேயிருந்தால் அக்குடும்பம் விரைவில் நொடித்து விடாதா பின்பு இடையருமல் எப்போதும் விளங்குவது எப்படி ? என்பவற்றை யெல்லாம் எண்ணும்போது இக்குறளில் நம்பிக்கை தோன் ருது தானே ! இதனைச் சிறிது ஆராய்வோம். திருவள்ளுவர் இந்தக் குறளில் தெரிவித்திருப்பது என்ன ? நல்ல வழியில் பொருள் ஈட்டவேண்டும்; அப் பொருளே, (பெற்ருேர், பெண்டாட்டி, பிள்ளை, துறந்தார், துவ்வாதவர், இறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், தான் என்னும்) பலர்க்கும் பயன்படுத்தி வாழ வேண்டும் என்பதுதானே இல்வாழ்வான் தன்னையும், தன் பெற்இருர், மனைவி, மக்களையும் காப் பா ற் ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒரு வன் தன் செல்வம் முழுவதையும் பிறர்க்கே செலவிட்டுத் தன் குடும்பத்தை, அழித்துவிட வேண்டும் என்பதன்று. போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா? எனவே, பிறர்க்கு ஒரளவு