பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அறத்துப்பால் (மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும்.அன்பு செய்தலேயும், அறம் செய்தலையும் உடைத் தாயின் அதற்குக் குணமா வதும் பயனுவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே. (பரி-உரை) ஒருவன் இல் வாழ்க்கை, தன் துணைவிமேல் செய் யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தின யும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம், இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்ருகா வழி இல்லறம் கடை போகாமையின் (நடவாமையின்) அன்புடைமை பண்பாயிற்று : அற அனுடைமை பயனுயிற்று. (ஆராய்ச்சி உரை) அன்பு என்பதற்கு மனைவிமேல் உள்ள அன்பு என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லை வைத்திருந்தாலும் பரி மேலழகர் பகாலாம் அவ்விதம். இல்லையே! ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள். -கூறினல், அவ்வில்வாழ்வானுக்கும் பெருமை, திருவள்ளு வர்க்கும் பெருமை! எல்லோரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியிடத்திலா அன்பு இல்லாதவகைப் போய்விடு வான். பரிமேலழகர் கூறியபடியே வைத்துக்கொண்டாலும், தம் மனைவியின் மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர், பிறரை நோகச்செய்கின்றனரே! பிறரை என்ன? பெற்ருே ரையே பேதுற (மயங்கச் செய்கின்றனரே! இதுதான இல்வாழ்க்கையின் இலக்கணம்? மேலும் பரிமேலழகர், அன்ன்ப இல்வாழ்க்கையின் இலக்கணமாகவும், அறத்தைப் பலனுகவும் பகர்ந்துள்ளார். இங்குக் கூர்ந்து நோக்கவேண்டும். 'பண்பும் பயனும் அது என்பது குறள். 'அது' என்னும் ஒருமை அன்பையும் அறத்தையும் உடைத்தாயிருக்கும் செயலைக் குறிக்கின்றது. எனவே,பண்பும் அச்செயல்தான், பலனும் அச்செயல்தான். பரிமேலழகர் உரைப்படி இாண்டையும் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் நோக்கம் வள்ளுவர்க்கு இருந்திருக்குமே யானல், பண்பும் பயனும் அவை” என்று பாடியிருப்பார். அன்பு இல்க்கணமாகும்போது, அறம் மட்டும் இலக்கணம் ஆகாதா? அறம் பயனுகும்போது, அன்பு மட்டும் பயன க்ாதா? ஆகுமே! ஆய்க அறிஞர். - சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை.