பக்கம்:தேடி வந்த குயில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம்...திருவிளக்கு

11


படிக்கப் படிக்க என் உள்ளத்தில் கவிதை ஊற்று வெள்ளப் பெருக் கெடுத்தது, நான் அவரோடு ஒன்றிப் போனேன்; அவரைப் போலவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றேன். பள்ளியில் எத்தனையோ செய்யுள்கள் படித்திருக்கிறேன். பாடம் செய்திருக்கிறேன். எத்தனையோ புலவர்கள் கூட்டங் களில் பைந்தமிழ் இலக்கிய மேற்கோள்களை நயங்களோடு விளக்கி ஆற்றிய சொற் பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ் நாட்டில் தோன்றிய பல பெருங் கவிஞர்களின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். பாரதிதாசன் கவிதைகளைப் படித்த போது ஏற்பட்ட உணர்ச்சியும் உந்துதலும் அதற்குமுன் என்னில் எழுந்த தில்லை. பாரதிதாசன் கவிதைகளைப் படித்தபிறகு, ஏற்பட்ட பாடவேண்டும்; எழுதவேண்டும் என்று முனைப்பு அதற்குமுன் ஏற்பட்டதில்லை. ஆம்! ஒரு திருவிளக்கு பல திருவிளக்குகளை ஏற்றி விடுவது போன்ற ஆற்றல் அவருடைய கவிதைகளுக்கிருந்தது. என்னை மட்டுமல்ல; அப்போது என்னொத்த வயதுடைய இளைஞர் பலரைக் கவிதை எழுதத் தூண்டுவனவாப் இருந்தன அவருடைய பாடல்கள். பாரதியாரைப் பின்பற்றி எழுதிய பெருங்கவிஞர்கள் ஏழெட்டுப்பேர்தான் இருந்தார்கள். ஆனால் பாரதிதாசனைப் பின்பற்றி எழுதிய கவிஞர்கள் நூற்றுக் கணக்கில் இருந் தார்கள். அத்தனை பேரும் முத்து முத்தாய் எழுதினார்கள். முருகு சுப்பிரமணியன் வீட்டில் பாரதிதாசன் தங்கியிருந்த போது, பள்ளி மாணவர்களாகிய நாங்கள் பள்ளிமுடிந்தவுடன் இரண்டொருவராகச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வீடு செல்வது வழக்கம். நான் அடிக்கடி போவேன்.