பக்கம்:தேன்மழை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்கர சேதுபதி (19-ஆம் நூற்றாண்டு) (ஒயிற்கும்மி) அற்றல் மிகுந்தவர் ஆட்சி புரிந்தவர் ஆஸ்திக நீதிபதிஅவரே பாஸ்கர சேதுபதி-புலவர் போற்றுந்தொல் காப்பியப் புத்தகம் போன்றவர் போனபின் ஏது.கதி? நற்றமிழ் கற்றவர் நன்மை புரிந்தவர் நாதச் சுவையரசர்-இராம நாத புரத்தரசர்-கவிதைப் பற்றினைப் பற்றாகப் பற்றியொப் பற்றநூல் பாடிய பாட்டரசர்! கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்தவர் கேள்வி நக்கீரரவர்-சிறந்த வாள்வினை வீரரவர் இளையான் பிள்ளை எனுங்கவி ராயரைப் போன்றவர் பேருப காரியவர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/213&oldid=926794" இலிருந்து மீள்விக்கப்பட்டது