பக்கம்:தேன்மழை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. (1883 - 1951) எழுத்தினால் இனிய பேச்சால் இடைவிடாத் துாய தொண்டால் பழுத்தபே ரறிவால் கல்விப் பார்வையால் நட்பால் நாட்டை இழுத்தவர்; என்தாய் போலே இளைத்தவர், கீர்த்தி சேர்த்துச் செழித்தவர்; விழித்த தென்றல் திரு. வி. க. என்னும் மேதை ! அன்புக்குத் துரதர், நீதி ஒளவையார் ; மெல்லி னத்தின் முன்னிற்கும் வல்லி னம்போல் முன்னின்ற தலைவர் 1 நாட்டின் நன்மைக்குப் பாடு பட்ட நாவலர்! தலைமை தாங்கும் கன்னிசெந் தமிழைக் காத்த காவலர்! கல்விச் செல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/223&oldid=926804" இலிருந்து மீள்விக்கப்பட்டது