பக்கம்:தேன்மழை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

                                             முல்லை
                    

தேனும் பொங்கியதே-வெயில்

தீபம் தொங்கியதே-மது

     தேடி நல்லிசை
     பாடி வண்டுகள்
     கூடி உண்டன கொண்டன காதல்
     கோடானு கோடிமுறை ஊடியே.



பூனை யின்சிறுவாய்-நகை

போலும் மெல்லரும்பாம்-மலர்

     போதில் வந்தொரு
     சோதி சுந்தர 
     மாது கொய்தனள் செய்தனள் மாலை
     மாறாத காதலிசை பாடியே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/25&oldid=495464" இலிருந்து மீள்விக்கப்பட்டது