இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23
முல்லை
தேனும் பொங்கியதே-வெயில்
தீபம் தொங்கியதே-மது
தேடி நல்லிசை பாடி வண்டுகள் கூடி உண்டன கொண்டன காதல் கோடானு கோடிமுறை ஊடியே.
பூனை யின்சிறுவாய்-நகை
போலும் மெல்லரும்பாம்-மலர்
போதில் வந்தொரு சோதி சுந்தர மாது கொய்தனள் செய்தனள் மாலை மாறாத காதலிசை பாடியே.