பக்கம்:தேன்மழை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 254 ஒரடி யூன்றி மற்றும் ஒரடி தூக்கி வைத்தே ஈரடி யிட்டு மேலும் எடுத்தடி வைத்துச் செல்ல ஊரிடங் கொடுத்த தேனும் உண்மையில் எங்கள் ஊரும் சேரியும் நகரும் நீண்ட தெருக்களும் நீயே யன்றோ? எனக்காகப் பெண்டு பிள்ளை எனக்காக வீடு வாசல் எனக்காக உற்றார் மற்றார் எனினுங்கேள் என்தாய் நாடே! உனக்கேதும் திங்கு நேரின் உன்துயர் துடைக்க வேண்டித் தனிக்காதல் மனைவி மக்கள் சகலமும் துறப்பேன் கண்டாய்! தாய்நாடே உன்னை வேண்டித் - . . தவிட்டையும் தின்பேன். இன்பத் தாய்நாடே உன்னை மீட்கத் தணல்மீதும் நிற்பேன். அன்புத் தாய்நாடே மாற்றார் நஞ்சைத் தரினும்யான் ஏற்பேன். வீரத் தாய்நாடே உன்னைக் ಆ.7ಕಹಕ சாகவும் அஞ்ச மாட்டேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/257&oldid=926838" இலிருந்து மீள்விக்கப்பட்டது